Saturday, August 18, 2012

மீள் பார்வை

பின்னூட்டத்தில் வாழ்த்திய, பாராட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி !


அடடா என்னவொரு அருமையான விளக்கம். இதைதான் தேடிக் கொண்டு இருந்தேன் நான். மிக்க நன்றி சார் ! பாடங்கள் அனைத்தும் எளிமையாகவும் முக்கியத் தேவைகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது.
ஸ்ரவாணி,  8/8/12
-------------------------
அருமையான வழிகாட்டல் பதிவு . குறிப்பாக பாதம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னது . இது போன்ற நுட்பங்களை பொது சமாச்சாரங்கள் எல்லாம் தாண்டி எதிர்பார்க்கிறோம். நன்றி !
ஸ்ரவாணி,  8/7/12
---------------------------  

வணக்கம், நீண்ட நாட்களாக இருந்த ஆசை உங்கள் பதிவை இன்று தான் பார்த்தேன். படித்து பயன் பெறுகிறோம். வாழ்த்துகள். நன்றி. . .
My Mobile Studios, on 3/16/12
----------------------------
Nice Post. Thanks for this post.
Sriman, on 2/15/12
------------------------------
what is the cause for azoospermia
Anonymous,  1/10/12
-----------------------------------
Azoospermia என்பது விந்துவில் அணுக்கள் எண்ணிக்கை குறைபாடுள்ளதை குறிப்பிடுவதாகும். நான் ஏற்கனவே இந்த பதிவில் கூறியபடி, புத்திரகாரகனான குரு ஜாதகத்தில் கெட்டிருந்தால், அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
Ramkaran, 1/10/12
----------------------------------------            
Dear Ramkaran, What a fantastic viswakarmatic comparison and description ! Keep it up and I pray that the Almighty to help our community for good thinking with pure mind and more artistic skills to our younger generation OHM! VISHWAKARMANE NAMAHA with regards gskumar,chennai
Anonymous, 1/7/12
------------------------
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. சனி பகவானைக்கண்டு யாரும் பயப்படத் தேவை இல்லை என்று மக்களுக்கு உணர்த்தவே இந்த பதிவாம். தொடர்ந்து வாருங்கள், தங்கள் மேலான ஆலோசனைகளைத் தாருங்கள். நன்றி !
Ramkaran, 1/9/12
----------------------------
If 5th Lord in 7th or 7th lord in 5th also love feeling will rise.... ref: Biruhat Jataka.
Senthilkumar, 12/8/11
-----------------------
5,7-ஆம் இடங்களுக்கு சுக்கிரன் தொடர்பு இருப்பது அவசியம். அதாவது, சுக்கிரன் 5-ஆம் அதிபதியாகவோ, 7-ஆம் அதிபதியாகவோ, 5-ல் சுக்கிரன், 7-ல் சுக்கிரன், 5,7ஆம் அதிபதிகள் சுக்கிரனுடன் கூடி நிற்பது அல்லது 5, 7 ஆம் அதிபதிகள் சுக்கிரன் சாரம் பெறுவது போன்ற பல காம்பினேஷன்களைச் சொல்லலாம். வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம், சுருக்கமாகத் தான் சொல்லியிருக்கிறது, அதனை நம்முடைய அனுபவம், ஆய்வுகளை வைத்து பலன் அறிய வேண்டும்.
Ramkaran, 12/11/11
-----------------            
மிக்க அருமை. தொடருங்கள்
venkatesa gurukkal, 10/23/11
--------------------
விஞானப் பூர்வமாகவும் நமது ஜோதிட நூல்கள் பிரகாரமும் மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி மிகக் கடினமான விஷயங்களைக் கூட விளக்கிப் போகிறீர்கள் நன்றி தொடர வாழ்த்துக்கள்.
Ramani, 10/20/11
---------------------
வாழ்த்துக்கு, மிக்க நன்றி! கூடிய விரைவில் கேள்வி-பதில் பகுதியை தொடங்குவோமாக !!
Ramkaran, 10/12/11
-----------------------          
வணக்கம் திரு.இராம்கரன், அருமையானப் பதிவு, பல புதிய தகவல்கள் தந்துள்ளீர்கள். நன்றி!!! உங்களது சேவை வளரட்டும்.... கேள்வி-பதில் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம. தாங்களுக்கு ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்!!! அன்புடன், ரமேஷ்.M
Ramesh, 10/5/11
-------------------------
Dear Sir, Currently I am learning Astrology. Your site is very useful to me. Thanks for your great work. Thanks & Regards, Amuthan Sekar
Amuthan Sekar, 9/29/11
--------------------------------               
Mr. Ramkaran.. What u mentioned here is absolutely right.Kindly start question & answers in these blog. I am appreciating your presentation style.
Althaaf, 9/28/11
-------------------------    
தங்களின் ஜோதிட தகவல்கள் உபயோகமாக உள்ளது. கேந்திராதிபத்திய தோஷம் பற்றிய இன்னும் சில சந்தேகங்கள்: உதாரனமாக, ஒரு ஜாதகப்படி கன்னி லக்னம். ஏழாம் அதிபதி குரு - ஆறாம் வீட்டில், ஏழில் சுக்ரன் உச்சம்பெற்று (தனியாக) - சனி பார்வையில், பத்தில் செவ்வாயுடன் கூடிய சனி பார்வையில் ஏழில் சுக்ரன் அப்படியானால், 'காரகோ பாவ நாசாய' - இந்த ஜாதகத்தின்படி கேந்திராதிபத்திய தோஷம் உள்ளது என்று கொள்ளலாமா ? ஆம் என்றால், இதன் சாதக பாதக அம்சங்கள் பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் ? நன்றி !
S.BhuvaneswaraN, 9/26/11
-------------------------------
திரு. புவனேஸ்வரன் அவர்களே! தாங்கள் கேந்திராதிபத்திய தோஷத்தையும், காரகோ பாவ நாஸ்தி என்ற ஜோதிட விதியையும் குழப்பிக் கொள்கிறீர்கள். இந்த இரண்டில், சில விதி விலக்குகளும் உண்டு. அடுத்து வரும் பதிவுகளை தொடர்ந்து படித்து வரவும். சற்று விளக்கமாக எழுதுகிறேன். நன்றி! கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன் அன்பன் இராம்கரன்
குரு   
Ramkaran, 10/2/11
---------------------------------                            
மக்கள் பிரச்சினைகளை விட்டு விட்டு இதற்கு சட்ட சபையில் நேரத்தை ஒதுக்கி யாரையோ திருப்தி படுத்துவதற்காக, எல்லோரின் கவனத்தையும் திசை திருப்புவதற்காகவே இந்த சட்ட திருத்தம். இதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
Rathnavel, 8/25/11
---------------------------------            
பிராமணர்களின் வேதம் ஒரு உயர்ந்த பொருளா? அதில் கூறிவிட்டால் அப்பீல் இல்லையா? பிராமணர்கள் வேதத்தைத் தொகுக்கும் முன் இந்த புவியில் மனிதர்கள் வாழவில்லையா? அவர்களுக்கு எந்த பண்பாடும் இருக்கவில்லையா? விண்ணியல், புவியியல், அறிவியல் என்று அனைத்தையும் கற்று தெளிவு பெற்ற தமிழர்களைவிட பிராமணர்களின் வேதம் பெரிதோ? சமசுகிருதமே ஒரு டப்பா மொழி, பிராமணர்கள் கிறுக்கிய வேதத்திற்கு ஒரு எழவும் பொருளில்லை. சோதிடம் என்பது பண்டைய தமிழர்களின் பண்பாட்டு மரபு. ஜோதிடம் என்பது அதன்பின் வந்த பிராமணர்களின் பண்பாட்டுத் திரிபு. முதலில் சரியாகக் கற்கவேண்டும், பின்பே தெளிவடையலாம். தெளிவித்தலா...அதற்கு வாய்ப்பு கிடைக்குமா?
ராவணன், 8/25/11
----------------------------------------
சோதிடத்தைப் பற்றி எழுதும்போதும் நம் விருப்பு வெறுப்புகளைத் திணிக்கக்கூடாது. இல்லாவிட்டால் வெறும் அரசியல் பதிவாக எழுதிவிடலாம். இரண்டையும் கலந்தால் வாந்தி வருவதுபோல் உள்ளது.
ராவணன், 8/25/11
----------------------------------
அன்பர் இராவணன் அவர்களே! பின்னூட்டத்திற்கு நன்றி! ஜோதிடத்தின் சிறப்பை உயர்த்தவே, வேதத்தைக் கூறினேன். ஒரு பதிவில் தமிழில் எழுதப்பட்ட கோளறு திருப்பதிகத்தையும் பதிவிட்டுள்ளேன். என்னுடைய எந்த பதிவிலும், சமஸ்கிருத மந்திரங்களைப் பற்றி கூறவில்லை, பதிவு இடவில்லை. ஒவ்வொரு கிரகத்திற்கும் தமிழில் உள்ள போற்றிகளையே பதிவிடுகிறேன். என்னுடைய கொள்கை வெறும் தெளிவித்தல் மட்டும் அல்ல. கற்றலும் தான். ஜோதிடம் பற்றிய குறிப்புகள் தமிழ்ச் செய்யுட்கள், அல்லது இலக்கியங்களில் இருந்தால், அதனை என் கவனத்திற்கு கொண்டு வந்தால், தங்களுக்கு நன்றி உடையவனாவேன். கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
Ramkaran,  9/5/11
----------------
நண்பர் திரு. இராவணன் அவர்களே! உங்களுக்குள் ஒரு மாணவன், ஒரு ஆசிரியன், ஒரு அரசியல்வாதி, ஒரு சினிமாக்காரன், ஒரு கதாநாயகன், ஒரு வில்லன் என்று பலபேர் ஒளிந்திருக்கிறார்கள். அதை உணர்ந்து வெளிக்கொண்டு வருவதுதான் ஜோதிடரின் திறமை. உங்கள் ஜாதகப்படி நீங்கள் ஒரு சிறந்த கதாநாயகன் ஆவீர்கள் என்று சொன்னால் இனிக்கும், அப்படியில்லாமல் உங்கள் ஜாதகப்படி நீங்கள் ஒரு வில்லனாக மாறுவீர்கள் என்று சொன்னால் வாந்தி வருமா?? இதில் என்னுடைய விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் இல்லை. ஜோதிட ஆய்வு செய்த பின்பே இந்த பதிவை எழுதினேன். நான் இந்த பதிவில் கூறியபடிதான் நடந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும், போராடியும், சமச்சீர்கல்வி விஷயத்தில் அம்மாவுக்கு தோல்வியே கிடைத்தது. இப்படித்தான் அம்மாவின் ஜாதகம் பேசுகிறது என்று கூறினேன். இதனை ஜோதிட ஆய்வுக் கட்டுரையாகவே தாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தக் கட்டுரையின் வெற்றியை குறித்தும், நம்பகத் தன்மையை குறித்து மட்டுமே தாங்கள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். சமச்சீர் கல்வி குறித்து இந்தப் பதிவு இட்ட நாள்: 12 ஜூலை 2011. உயர்நீதிமன்றம் ஜெ அரசின் கொள்கையை தடை செய்தது பதிவிட்டு 1 வாரம் கழித்துதான்.
Ramkaran, 9/5/11
-------------------
ஜோதிட அறிவியலின் துணையுடன் ஒருவருக்கு வரும் வியாதி என்ன வென்று, பல்ஸ் பார்க்காமால், இரத்தப் பரிசோதனை செய்யாமால், எக்ஸ்ரே எடுக்காமல் கூற இயலும்போது, ஏன் எய்ட்ஸ் வருமா என்று கூட சொல்ல இயலுமா என்று ஜோதிட ஆய்வு செய்து கொண்டு இருக்கும் போது, ஒருவரின் அரசியல் வாழ்வைக் கூற இயலாதா? தேர்தல் விருப்ப மனுவுடன் ஜாதகத்தை இணைத்துத் தர உத்தரவிட்ட பொழுது, அரசியலையும், ஜோதிடத்தையும் அவர்கள் இணைத்த பொழுது தங்களுக்கு வாந்தி வரவில்லையோ? நல்ல காமெடிதான் போங்க இராவணன் !
Ramkaran, 9/5/11
-------------------
அடுத்து வரும் ஜோதிடப் பாடங்களை படித்து, தொடருங்கள். இப்பொழுது கிரகங்களைப்பற்றி எழுதி வருகிறேன். அது முடிந்தவுடன், ராசிகளைப் பற்றி எழுதுவேன். அதன் பிறகு கணக்கீடுகளுக்கு செல்லலாம். பொறுமையாக பின் தொடரவும். நன்றி ! கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன் அன்பன் இராம்கரன்
Ramkaran, 8/16/11
----------------------------
வணக்கம், உங்களது சேவை வளரட்டும். பிறந்த திகதி, நேரம் என்பவற்றிலிருந்து எவ்வாறு இராசி மற்றும் நட்சத்திரங்களை கணிப்பது என்று கூற முடியுமா?
Viji Anandh, 8/10/11
----------------------------
SImple to read.. Please read this book... It may help you ... http://www.vallalyaar.com/?p=409
Balu, 7/25/11  
------------------------------
ஒரு வேண்டுகோள் நண்பரே, BLOGGER SETTINGS ல் சென்று COMMENTS ஏரியாவில், WORD VERIFICATION OPTION ஐ நீக்கிவிடுங்கள். இது கருத்திட பெரும் தொந்தரவாக இருக்கும்.. இரண்டவாது.. நீங்கள் அனுமதித்த பிறகு தான் COMMENTS வெளியாக வேண்டும் - இந்த அமைப்பில் செய்து கொள்ளுங்கள் இதுவே நன்மை தரும்.. நன்றி..
சிவ.சி.மா. ஜானகிராமன், 7/24/11
-----------------------------        
அருமையான வலைத்தளம் கண்டோம்.. சோதிட பாடங்கள் - அறிவியலோடு.. வாழ்த்துக்கள் - இனி தொடர்ந்து இறையருளால் வருகிறோம்.. http://sivaayasivaa.blogspot.com சிவயசிவ
சிவ.சி.மா. ஜானகிராமன், 7/24/11
-----------------------------        
சமச்சீர்கல்வி குறித்த உயர்நீதிமன்றத்தின் அபார தீர்ப்பு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: - நடப்பு ஆண்டிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டும். - 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும். - சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது. - தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செய்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மன்னியின் ஜாதகத்தில் புதன் நன்றாகவே வேலை செய்கிறார். 
சமச்சீர் கல்வியும்,புதனும்
               
Ramkaran, 7/18/11
------------------------------     
good service to hinduism keep it up
ramalingams, 7/18/11
------------------------------
மன்னிக்கவும், பொதுவாக எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், தாங்கள் அதனோடு சமச்சீர் கல்வியினையும், ஜெ.வினையும் தொடர்பு படுத்தி வந்த இந்தப் பதிவு சுவாரசியமாக மட்டுமின்றி, உண்மையையும் பிரதிபலிக்கின்றது. கட்டுரை அபாரம்! இவரது ஆட்சி என்றாலே, கல்வித் துறையும், தொழிற் துறையும் படாத பாடு படுகின்றது என்பது இதுவரை நாம் கண்ட உண்மை அனுபவம்.
நெல்லி. மூர்த்தி, 7/17/11
--------------------------------               
Dear Sir, you are doing good job.
Shanthi, 7/7/11
--------------------------------               
Very Good Work and Good Intention! Thanks S.Moorthy – Chennai
ஜோதிடம் கற்கலாம் வாங்க -14
Moorthy, 7/6/11
------------------------------
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Rathnavel, 7/6/11
-------------------------------
you deserve a five star ***** - Siva
Anonymous, 7/5/11
--------------------------------               
very interesting and informative posts; when is the next post expected? – Siva
Anonymous, 7/4/11
---------------------------------
super sir
Anonymous, 7/4/11
-----------------------------------
பாராட்டுதலுக்கும், தாங்கள் மற்ற பதிவுகளில் தந்துள்ள வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், தங்களுடைய நண்பர்களுக்கும், தெரிவியுங்கள், ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வை தமிழ்மக்களுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து உண்டாக்குவோம். வாரத்திற்கு ஒரு பதிவு இடுகிறேன். தேவைப்படின் கூடுதல் இடலாம். நன்றி கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன் அன்பன் இராம்கரன்
சந்திரன்       
Ramkaran, 6/13/11
-----------------------------        
அடுத்த பதிவு எப்போது அன்பரே.
சந்திரன்         
Shivadaasan, 6/12/11
-------------------------------
மிக மிக அருமை அன்பரே.
சந்திரன்        
Shivadaasan, 6/12/11
---------------------------------            
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் திரு. ராம்கரன் அவர்களே. அட்ச, தீர்க்க ரேகை பற்றிய தகவல்கள் நன்றாகவும் சரியாகவும் உள்ளது. மிகவும் அருமை.
Shivadaasan, 6/12/11
------------------------------------   
super
Shivadaasan, 6/12/11
-----------------------------------      
தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.
Shivadaasan, 6/12/11
--------------------------------------             
உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
Shivadaasan, 6/12/11
-------------------------------------
பாடம் எளிமையாக புரியும்படி உள்ளது. நன்றி
Shivadaasan, 6/12/11
------------------------------------   
அஸ்தமனம் ஆன சூரியன் உதிக்காது -என்று ஜெ. கூறியுள்ளாரே
சூரியன்          
Shanthi, 6/7/11
--------------------------------------
என்னை எப்படியும் அரசியலில் இழுத்து விட முடிவு செய்துவிட்டீர்கள் போல! ஜெ. அஸ்தமனம் ஆன சூரியன் உதிக்காதுஎன்று சொன்னது தி.மு.க.வைத்தான் என்று நினைக்கிறேன். இருப்பினும் அதிகார போதை சில சமயம் கண்ணை மறைக்கும்என்று சொல்லுவார்கள். அவர் நேரிடையாகவே தி.மு.க. என்றே சொல்லி இருக்கலாம். சூரியனையே வம்புக்கு இழுத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேல்; அவர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர், சிம்ம ராசிக்காரர். ராசிநாதன் சூரிய பகவான். அவரே ராசிநாதனை வம்புக்கு இழுத்துள்ளார் என்றால் என்ன சொல்வது. அதிலும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் வேறு. சூரியன் உதிக்கவில்லை என்றால் இந்த உலகம் இருண்டு போகும் என்ற அடிப்படை அறிவியலை ஏன் மறந்தாரோ தெரியவில்லை!! நாளை ஜால்ரா தினசரிகளில் தலைப்பு செய்தியாக வராமல் இருப்பின் நன்று; அல்லது சிறுவர், சிறுமியர் அதனைப் படித்துவிட்டு அம்மாசொல்வது உண்மையா என்று அப்பாவிடம் கேட்டு, அப்பாவின் அறிவை சோதிப்பார்கள். பொறுப்பில் உள்ளவர்கள், ஜால்ரா அதிகாரிகள் எழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்காமல் இருப்பது நல்லது. உங்களைப் போன்ற பொது ஜனம் கமெண்ட் எழுதி, அதற்கு என்னை வேறு வம்புக்கு இழுத்து பதில்
சூரியன்        
Ramkaran, 6/7/11
----------------------------------         
நல்ல பதிவு. இதற்கு பதில் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்ன? முற்பிறவி போன்றவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு பேச்சுக்கு, பல பிறப்புகள் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். போன பிறவியில் நான் எப்படி இருந்தேன் என்று எனக்குத் தெரியாது.செய்த தவறு என்னவென்றே தெரியாமல் எப்படி தண்டனை அனுபவிப்பது?
ஞாஞளஙலாழன், 5/10/11
------------------------
ஜோதிட சாஸ்திரத்தில், நமது ஞானிகள் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஜாதகத்தில் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளார்கள். அதனைக் கொண்டு, உங்கள் முற்பிறவிப் பயனை அறிந்து கொள்ளலாம். முற்பிறவியின் வழியாக, இப்பிறவியில் உங்களுக்கு கிடைக்கும் யோக, அவயோகங்களை சொல்லலாம். கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன் அன்பன் இராம்கரன்
----------------------
அருமையான தகவல்கள். நன்றி
Dr.எம்.கே.முருகானந்தன், 5/8/11
-------------------------------------
பாராட்டுதலுக்கு நன்றி! ஏதோ எனக்குத் தெரிந்த விஷயங்களை, அனுபவங்களை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான். தொடர்ந்து வாருங்கள், தங்களின் மேலான யோசனைகளைத் தாருங்கள். கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன் அன்பன் இராம்கரன்
Ramkaran, 5/9/11
----------------------------------- 
நல்ல பயனுள்ள பதிவு. சோதிடம் மீது எனக்கு முழு நம்பிக்கை இல்லாவிடினும் அதைக் கற்கும் ஆவலில் சில புத்தகங்கள் வாங்கி படித்தேன். ஆனால் அனுபவம் தான் கை கொடுக்கும் என்று அந்த புத்தகங்களில் போட்டிருந்தார்கள். நீங்கள் சில புத்தகங்களைப் பரிந்துரை பண்ணினால் இன்னும் நலமாக இருக்கும்.
ஞாஞளஙலாழன், 5/3/11
-------------------------
அன்பரே தொடர்ந்து நமது வலைப்பூவிற்கு வரவும். ஜோதிடத்தை எளிய முறையில் இனிய தமிழில் கற்றுத் தருகிறேன். தொடர்ந்து வந்தாலே போதும், ஜோதிடம் கற்கலாம். அடிப்படை ஜோதிடம் கற்றுணர்ந்த பின் நானே பல நூல்களை பிறகு பரிந்துரை செய்கிறேன். அதுவரை பொறுமையாக பாடத்தில் கவனம் செலுத்தவும். புத்தகத்தை நீங்கள் படிக்கலாம், விவாதிக்க இயலாது. ஆனால் எங்களுடன், விவாதிக்கலாம், எங்களின் அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை, அந்தந்த பதிவிலேயே கேட்டால், அதற்கு நாங்கள் தரும் பதில் உங்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும் பயன் தரும். கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன் அன்பன் இராம்கரன்
Ramkaran, 5/3/11
-----------------------
உங்களது வலைப்பூவில் IST மற்றும் Local time பற்றிய கட்டுரையைப் படித்தேன். பொதுவாகக் குழந்தை பிறந்ததும் கடிகாரம் பார்ப்பதுதான் வழக்கம். அவ்வாறானால், பின்னர் ஜாதகம் கணிக்கும்போது அதனுடன் உள்ளூர் நேரத்தை கூட்டியோ குறைத்தோ சரி செய்து கொள்ள வேண்டுமா?
ஜோதிடம் கற்கலாம் வாங்க - 10   
Anonymous, 4/19/11
------------------------------ 
ஜாதகம் கணிக்கும்போது, பிறந்த இடத்தை வைத்து, ஜோதிடர் நேர வித்தியாசத்தை அறிந்து அதன் பிறகு ஜாதகத்தை கணித்து விடுவார். நீங்கள் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். ஜோதிடரிடம் IST நேரத்தை, அதாவது கடிகாரம் காட்டும் நேரத்தை கூறினாலே போதும். நீங்கள் தான் ஜாதக கணிதம் செய்யப் போகிறீர்கள் என்றால், எமது வலைப் பதிவை தொடர்ந்து படித்து வரவும், அதற்கான விவரங்களை தொடர்ந்து வரப்போகும் பதிவுகளில் காணலாம். அன்பன் இராம்கரன் on ஜோதிடம்கற்கலாம் வாங்க - 10
Ramkaran, 4/20/11
----------------------------------
அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க 8 எப்ப சார்?
MUTHUKUMAR, 3/14/11
---------------------------------------   
I enjoy reading your articles.
Murari, 2/24/11
----------------------------
மிக்க நன்றி திரு. முராரி அவர்களே! தொடர்ந்து வாருங்கள், ஜோதிட பொக்கிஷத்தை அள்ளிச் செல்லுங்கள். அன்பன் இராம்கரன்
நேமாலஜி என்றால் என்ன? 
Ramkaran, 2/24/11
---------------------------    
//மாணவர் : எனக்கு பிடித்த சப்ஜெக்ட் கணக்கு தான். அதில கேளுங்க சார் கணக்கு பாடம் மட்டுமா, கேர்ள் பிரண்ட்ஸ் கணக்கு செய்யவும் பிடிக்கும் போல...
Kishore, 2/23/11
--------------------
நண்பர் கிஷோர் அவர்களே! ஜோக்கை படிக்கவும், சப்ஜக்டை பிடிக்கவும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். புரிந்த கொள்ள சிரமமான ஒரு அஸ்ட்ரோ சப்ஜக்டை உங்களுக்காக எளிதில் புரியும்படி எழுதுகிறேன். அதற்கு இடையே கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டும் என்பதற்காகவும், ஜோக்ஸ் மூலமாக ஏதாவது மெஸேஜ் சொல்ல முடியுமா என்று கருதியும்தான் நகைச்சுவையையும் எழுதி வருகிறேன். அதனால், நீங்கள் ஜோக்கிற்காக மெனக்கிட்டு பின்னூட்ட்டம் எழுதாமல், பாடத்தை கவனமுடன் படித்து அதைப் பற்றி உங்களுடைய கருத்தை, அல்லது சந்தேகங்களை பதிவை செய்தால் தாங்கள் கேட்கும் கேள்வியின் வாயிலாக நான் தரும் பதில், மற்றவர்களுக்கும் பயன்படும். அன்பன் இராம்கரன்
Ramkaran, 2/24/11
------------------  
ராசா கவிதை சூப்பர் ஐயா !!!!!!!!
Kishore, 2/22/11
---------------------
திரு. கிஷோர் அவர்களே! பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் ! நான் முழு நேர கவிஞன் இல்லை. எவ்வளவோ எழுதறோம் ! ஒரு கவிதை எழுத முடியாதான்னா? அன்பன் இராம்கரன்
Ramkaran, 2/22/11
---------------------------------   
திரு.இராம்கரன், நேமாலஜி குறித்து ஆய்வு செய்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம் நோக்கமாகும். யார் மனதையும் நோகடிப்பது எண்ணமல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும். மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்று சொல்லி கண் சிவக்காதீர்கள். .......................ha ha ha haha ha .....!!!!! அருமையான பதிவு நண்பரே.. நகைச்சுவை அருமை!!! வாழ்த்துக்கள்....
Ramesh, 2/22/11
------------------------------------
திரு. இரமேஷ் அவர்களே! வாழ்த்துக்கு மிக்க நன்றி ! தங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கமே என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. இந்த வலைப்பூவை வந்து பார்க்கும், படிக்கும் அனைவரும், தாங்கள் ரசித்த, விரும்பிய பகுதிகளையும், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும், பின்னூட்டமாக இட்டாலோ அல்லது மின் அஞ்சல் செய்தாலோ, மேலும் ஆராய்ச்சி செய்ய எனக்கு உற்சாகமாக இருக்கும். நிறை குறைகளை சுட்டிக் காட்டவும். நன்றி கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன் அன்பன் இராம்கரன்
Ramkaran, 2/22/11
--------------------------------
நகைச்சுவை அருமை!!! வாழ்த்துக்கள்...
அசோக்.S, 2/17/11
-------------------------------------
திரு.இராம்கரன், அருமையான, நிறைவான பதிவு நண்பரே.. ஜோதிட நகைச்சுவை அருமை!!! வாழ்த்துக்கள்....
    
Ramesh, 2/16/11
--------------------------------------------   
இரமேஷ், முத்துக்குமார் அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி ! தொடர்ந்து வரும் பதிவுகளை படியுங்கள். Knowledge is Power ! அன்பன் இராம்கரன் ஜோதிடம் கற்கலாம் வாங்க - 3
Ramkaran, 2/9/11
----------------------------------------------
மிக்க நன்றி! திரு. இராம்கரன் அவர்களே , மிகவும் எளிமையான் பதிவு, ஆழமான தெளிவுரை நன்றி!நன்றி!நன்றி!..
MUTHUKUMAR, 2/7/11
---------------------------------------------  
திரு.இராம்கரன், பதிவு எளிமை, அருமை.... நன்றி!!!
Ramesh, 2/3/11
-------------------------------------------------   
திரு.இராம்கரன், பதிவு எளிமையாக மிகவும் நன்றாக உள்ளது. நன்றி!!!
Ramesh, 2/3/11
--------------------------------------------
உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு இரமேஷ் அவர்களே ! தொடர்ந்து வந்து படித்து, உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அன்பன் இராம்கரன்
Ramkaran, 2/1/11
-------------------------------------
திரு இராம்கரன் அவர்களே!நல்ல துவக்கம்.கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற முழக்கத்துடன் .. தாங்கள் முழக்கத்த்திற்கு தலை வணங்குகிறோம் !!! தொடருங்கள்...பின்தொடருகிறோம்...!!! மனமார்ந்த வாழ்த்துக்கள்!நன்றி...
ஜோதிடம் கற்கலாம் வாங்க-1   
Ramesh, 2/1/11
----------------------------------- 
//பாதம் கண்டிப்பாக கூற வேண்டும்// ஏன் பாதத்தை கண்டிப்பாக கூற வேண்டும் என்பதன் விளக்கமென்ன?
Kishore, 1/24/11
-------------------------
நண்பர் கிஷோர் அவர்களே ! ஜோதிடக் கருத்துக்களை, ஆர்வத்துடன் படித்தமைக்கு, நன்றி ! தொடர்ந்து நம்முடைய எழுதுக்களை படித்து வரவும். அடுத்துவரும் ஜோதிடப் பாடங்களில், அதற்கான விளக்கத்தை தருகிறேன். அது பாடமாகவும் அமையும், உங்களுக்கு பதிலாகவும் அமையும். கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கைடன், உங்கள் அன்பன் இராம்கரன்
ஜாதகம் என்றால் என்ன?
Ramkaran, 1/24/11
--------------------------------------
தரமான தகவல் நிறைந்த வலைப்பூ, தொடர வாழ்த்துக்கள்- சாந்தி
Shanthi, 1/19/11
------------------------------------------
சேவை தொடர வாழ்த்துக்கள் - வசந்தி காத்தலிங்கம்
vasanthi kathalingam, 1/19/11
--------------------------------------    
Hats off to u! You are simply superb!Congrats! God Bless you and your Family
vasanthi kathalingam, 1/19/11

No comments: