Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-6

6 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-5)

நம்முடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த, மறக்கப்பட வேண்டிய, மறைக்கப் பட்ட விஷயத்தை ஜோதிடர் கூறிவிடுவாரோ என்ற அச்சம் பலருக்கு, இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக, ஜோதிடர் எவரும், ஜாதகரின் எதிர்காலத்தைக் குறித்தே பலன் கூறுவார்கள். ஆனால், ஜோதிடரை கலாய்க்கலாம், அல்லது அவரை சோதிப்பதற்காக கடந்த காலத்தைப் பற்றி கேட்பார்கள், ஏனெனில் கடந்த காலத்தில், நினைவு தெரிந்த காலத்தில் இருந்து, நடந்தவை அனைத்தும், ஞாபகத்தில் இருப்பதால், ஜாதகர் ஜோதிடரை சோதிக்க வேண்டி கடந்த காலத்தைப் பற்றி கேள்வி கேட்பதை, நான் பார்த்திருக்கிறேன். மற்றபடி பொதுவாக ஜோதிடர்கள், ஜாதகம் அவருடையது தானா என்று உறுதி செய்வதற்காக கடந்த காலத்தில் நடந்த ஒரு சில விஷயங்களை சொல்லுவார். இதற்கு அவர் சொல்லும் பதிலை வைத்து, ஜாதகம் அவருடையதுதானா என்று கண்டு பிடிப்பார். ஜாதகம் நல்ல முறையில் கணிதம் செய்யப்பட்டுள்ளதா, என்றும் கண்டு பிடிக்கலாம். அவ்வாறு உறுதி செய்வதற்காக, கேட்கப்படும் கேள்விகள் அந்தரங்கமாக இருக்காது. உதாரணத்திற்கு, இந்த வயதில், உங்களுக்கு காலில் அடிபட்டு இருக்கலாமே! போன்ற கேள்விகளாகத்தான் இருக்கும். ஜாதகர் கேட்டால் மட்டுமே, அந்தரங்கமான விஷயங்களை, உடன் யாரும் இல்லாத தருணத்தில் சொல்லுவார். ஒரு மருத்துவரிடம் ஆலோசிப்பதைப் போல், ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசிக்கலாம். அவர்களும், தொழில் தர்மத்தை (Professional Ethic) கடைபிடிப்பார்கள். அதனால், அவசியமற்ற பயம் வேண்டாம்.

ஒரு வழியாக ஜாதகம் பார்க்கலாம் என்று முடிவெடுத்திருப்பீர்கள் என்று நினக்கிறேன். நல்ல விஷயம் எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும், தெரிந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல இறைவன், உங்களை வழி நடத்துவான்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க-1


No comments: