Thursday, August 30, 2012

மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு


சரியான ஆன்மீகம் என்பது, மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டுவதும், அவர்களின் துன்பத்தைக் கண்டு, வாடுவதும் தான். என்னில் உள்ளவன், உன்னிலும் இருக்கிறான், என்பதை உணர்த்த வேண்டியே அன்பே சிவம் என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றனர்.

இனி மாரடைப்பின் காரணமாக, வரும் ஆபத்தை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம். 

மூன்றெழுத்து மந்திரம்   S T R
 
S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண விழாவில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது கூட, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம். ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R  அதாவது,  

SMILE (சிரிக்க சொல்வது),  
TALK (பேச சொல்வது), 
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)

போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். 

மேற்கூறிய இந்த மூன்றையும், இவர்களால் செய்ய இயலவில்லை என்றால், உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம். மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

மேற்கூறிய இந்த மூன்றையும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதாவது, அவருடைய  நாக்கை நீட்ட சொல்ல வேண்டும், அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம். அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
கவனம் தேவை !

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள்.  


அன்பே சிவம் !


கற்றல் தெளிதல் தெளிவித்தல் என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய
அருமையான மருத்துவத் தகவலை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

ramkaran said...

வாழ்த்துக்களுக்கு நன்றி !

முத்தரசு said...

நல்ல பகிர்வு அறிந்து கொண்டேன்

அவசியம் பகிர்ந்துகொள்கிறேன் நன்றி